சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ஐரோப்பிய ஒன்றியம்

Published By: Digital Desk 3

27 Jun, 2020 | 02:31 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் தம்மைப் பதிவுசெய்து கொள்ளாமல் இயங்கும் 40 சதவீதத்திற்கும் அதிகமான சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பதிவுசெய்வதை இலகுவாக்கும் வகையில் நாடு முழுவதிலும் வியாபார சேவை நிலையங்களை நிறுவவுள்ளதாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் இலங்கையில் வியாபாரங்களைப் பதிவுசெய்வது என்பது மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் வியாபார சேவை நிலையங்களை நிறுவுவதற்கான அனுமதியை சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை நிலையங்களின் ஊடாக வியாபார ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்படுவதுடன் வியாபார உதவிச்சேவைகளும் வழங்கப்படும்.

இந்த வியாபாரச்சேவை நிலையங்கள் வியாபாரங்களைப் பதிவு செய்வதற்கான செயன்முறையை எளிமைப்படுத்துவதுடன் தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைகளை அணுகுதல் போன்ற செயற்பாடுகளுக்கான உதவிகளையும் வழங்குகின்றது.

அதற்கு மேலதிகமாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு சேவையளிக்கும் வகையில் வியாபார அபிவிருத்திச்சேவை வழங்குநர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புக்கள், நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுடன் தொடுக்கப்பட்ட இணையக் கட்டமைப்பொன்று வடிவமைக்கப்படும்.

இச்சேவை வழங்கல் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும். மாவட்ட மட்டத்தில் சேவை வழங்குவோர் இந்த நிலையங்களுடன் இணைந்து செயலாற்றுவதனூடாகத் தேவைப்படும் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பார்கள்.

இவற்றை நிறுவுவதற்கான பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஜேர்மனி ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து முன்னாள் தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சு ஆகியவற்றுடன் பணியாற்றியிருந்தன. அதன் முதற்கட்டமாக மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 4 வியாபாரசேவை நிலையங்கள் நிறுவப்படவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி,

'ஊவாக மற்றும் மத்திய மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் எமது உதவித்திட்டம் நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். வியாபாரத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் அனைவருக்கும் தமது வியாபாரத்தைப் பதிவுசெய்து கொள்வது மற்றும் உள்நாட்டு வியாபாரசேவை வழங்குநர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வது ஆகியவை மிகவும் இலகுவானதாக அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க 2,500...

2026-08-15 15:55:29
news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதியளித்த வலி....

2026-08-15 15:30:06
news-image

இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவுஸ்திரேலிய...

2026-08-15 15:58:50
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

சோமரத்ன ராஜபக்‌ஷவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள்...

2026-08-15 15:40:22
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55