(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கையின் கடல் எல்லை மற்றும் பாதுகாப்பில் காணப்படும் பலவீன நிலை எச்சரிக்கை மிக்கதாக அமைகிறது.
இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து மீள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜப்பான் தரப்புகளுடன் இணைந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்பு முகாமைத்துவம் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
மேலும் கடல் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவுடனும் தனது செயற்பாடுளை இலங்கை விஸ்தரித்துக் கொண்டுள்ளமை முக்கியமானதென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பயங்கரவாதம் தொடர்பான 2019 ஆம் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது .
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
அமெரிக்க கடற் பாதுகாப்பு படை மற்றும் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் எல்லை பாதுகாப்பு பிரிவுடன் இலங்கை கடற்படை பல்வேறு பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் ஊடாக கடல் பாதுகாப்பு சார்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புகளுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் பிரகாரம் இலங்கை கடற்படையின் சிறப்பு ரோந்து படகு பிரிவு மற்றும் வேகமாக தாக்குதல் நடவடிக்கைளில் ஈடுப்பட கூடிய பிரிவு என பல்வேறு வழிகளில் இலங்கையுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா செயற்படுகிறது.
அத்துடன் இலங்கையின் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டில் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அந்த இயக்கத்தின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறது.
அதே போன்று 2009 இல் இருந்து இலங்கையில் எவ்வித தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறவில்லை. ஆனால் 13 புலி ஆதவாளர்கள் 2014 ஆம் ஆண்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
மறுப்புறம் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தெற்காசிய செயற்பாடுகள் வெளிப்பட்டது.
இதன் போதே இலங்கையின் கடல் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் உலக பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குறிய பல நாடுகளுடன் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM