கொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (27.06.2020) 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
குறித்த 18 மணிநேர நீர்வெட்டு கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று சனிக்கிழமை (27.06.2020) இரவு 10 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (28.06.2020) பிற்பகல் 4 மணிவரையான 18 மணிநேர நீர்வெட்டு இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மேற்கூறப்பட்ட இடங்களில் அவசர திருத்த பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM