இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வங்கியுள்ளது என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்புப் பேரவையின் 80ஆவது கூட்டம் நேற்று மாலை முன்னாள் சபாநாயகரும் அதன் தலைவருமான கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்களாக இருந்த நிஹால் பொன்சேகா மற்றும் துஷ்னி வீரக்கோன் ஆகியோரின் பதவி விலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ்வினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்புப் பேரவையினால் கலந்துரையாடப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.
மேலும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவிருந்த கலாநிதி. ஜயந்த தனபாலவின் பதவி விலகல் தொடர்பில் தலைவரினால் அரசியலமைப்பு பேரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் கலாநிதி ஜயந்த தனபால அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கிய விசேட சேவையும் இதன்போது பாராட்டப்பட்டது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையின் ஏற்பாடுகளுக்கு அமைய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரிகேடியர் பி.பி.ஜே.பெர்னான்டோவின் (ஓய்வுபெற்ற) பெயர் குறித்தும் அரசியலமைப்புப் பேரவை கலந்துரையாடியது.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலினால் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் அரசியலமைப்புப் பேரவைக்குக் கிடைக்கப்பெற்றிருந்த கடிதம் மற்றும் அது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட அவதானிப்பு அரசியலமைப்புப் பேரவையின் தலைவரினால் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் அஹிம்சா விக்ரமதுங்கவினால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தின் பிரதி அரசியலமைப்புப் பேரவையின் தலைவரினால் அதன் உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அவதானிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்றும் இதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, தலதா அத்துகோரல, சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், பேராசிரியர். நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM