திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு சந்திப்பகுதியில் இன்று (24.06.2020) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் அல்லை நகர் ,6 ஆம் வட்டாரம், தோப்பூரை வசிப்பிடமாக கொண்ட ஜவாகிர் முகமது அஹ்சன் (வயது 23) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பிரதேசத்தில் இருந்து கிளிவெட்டி நோக்கி சென்ற அம்பியூலன்ஸ் வண்டியும் தோப்பூர் பிரதேசத்தில் இருந்து மூதூர் பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மரணமாணவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாம் கைது செய்தாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM