(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜும்ஆ மற்றும் ஐவேளை கூட்டுத்தொழுகைகளுக்கு ஒரே நேரத்தில் நூறுபேர் வரை கலந்துகொள்ள சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன விடுத்த வேண்டுகோளுக்கமைய, முஸ்லிம் பள்ளிவாசல்களில் கூட்டு வழிபாடுகளில் ஈடுபடும்போது ஒரே நேரத்தில் 100 பேர்வரை கலந்துகொள்ளலாம்.
இதன்போது கொவிட்19 பரவுவதை தடுக்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வழிபாட்டுக்கு வருபவர்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
குறிப்பாக முகக்கவசம் அணிதல், நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுதல் மற்றும் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.
முன்னதாக பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகியவற்றில் ஆட்களிடையே ஒரு மீற்றர் இடைவெளி பேணி ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்து. இந் நிலையில் தற்போது அதன் எண்ணிக்கையை 100ஆக அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM