பலவீனமடைந்துள்ள ஐ.தே.க  இனி ஆட்சியை கைப்பற்றாது - ஆதரவாளர்கள் எம்முடன் இணைய வேண்டும் என பிரதமர் அழைப்பு  

Published By: Digital Desk 3

24 Jun, 2020 | 12:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில்  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள    ஜனநாயகத்தை  உயிர்ப்பிக்க    அனைத்து தரப்பினரும் ஒன்றினைய வேண்டும்.   

அரசியல்  ரீதியில் பலவீனமடைந்துள்ள ஐக்கிய  தேசிய கட்சி   இனி ஆட்சியை கைப்பற்றாது ஆகவே  ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்  பொதுஜன பெரமுனவுடன்  இணைந்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அழைப்பு   விடுத்தார்.

பிங்கிரிய முருகண்டிய    பிரதேசத்தில் இடம் பெற்ற  ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார  கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்    பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதனூடாக  சிறந்த அரச  நிர்வாகத்தை செயற்படுத்துவதே எமது  எதிர்பார்ப்பாகும்.    நல்லாட்சியில் ஜனநாயக உரிமைகள்  மறுக்கப்பட்டுள்ளன. 

உரிய  காலத்தில் எந்த தேர்தல்களும் இடம் பெறவில்லை . இது  மக்களின் அடிப்படை உரிமை  செயற்பாடு என்று  குறிப்பிட  வேண்டும். ஜனநாயகத்தை    பலப்படுத்த அனைத்து  தரப்பினரும்  ஒன்றினைய வேண்டும்.

அரசியல்  ரீதியில்  ஐக்கிய தேசிய கட்சி  பலவீனமடைந்துள்ளது.  இனியொருபோதும்  இவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியாது.

ஐக்கிய   மக்கள் சக்தியின்  நிலைமையும் இவ்வாறே  காணப்படுகின்றது.   தேர்தல் பிரசார  நடவடிக்கைகளை  பொதுஜன பெரமுன   வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.  ஐக்கிய   தேசிய கட்சி மற்றும் ஐக்கிய  மக்கள் சக்தி ஆகியோரின் உறுப்பினர்கள்  , ஆதரவாளர்கள்   அரசியலில்  எவ்வாறான  தீர்மானங்களை எடுக்க வேண்டும் என குழப்பமடைந்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தாராளமாக  இணைந்துக் கொள்ளலாம். 

அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து   சிறந்த அரசாங்கத்தை  ஸ்தாபிக்க வேண்டும். ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை   செயற்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11