இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சாந்தகுமரன் ஸ்ரீ சாந்த் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் (பி.சி.சி.ஐ) விதிக்கப்பட்ட 7 ஆண்டு கால தடை உத்தரவு முடியவுள்ளதால், ஸ்ரீ சாந்தை, ரஞ்சி அணியில் சேர்ப்பதற்கு கேரள மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாந்த், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அந்நாட்டு பொலிஸார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது.
இதனால் பி.சி.சி.ஐ. அவருக்கு ஆயுட்காலம் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடைவிதித்தது. பொலிஸ் வழக்கை எதிர்த்து நீதிமன்றில் முறையிட்டார் ஸ்ரீ சாந்த். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீ சாந்த குற்றம் செய்யவில்லை என தீர்ப்பளித்தது. மேலும், 2018 இல் ஸ்ரீ சாந்துக்கு எதிரான தடையை நீக்குமாறு கேரளா உயர் நீதிமன்றம் பி.சி.சி.ஐ. க்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ சாந்த் குறித்த வழக்கின்போது, தடைக் காலத்தை குறைக்குமாறு பி.சி.சி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதனால் பி.சி.சி.ஐ. ஸ்ரீ சாந்த் மீதான தடையை 7 ஆண்டாக குறைத்தது.
ஸ்ரீ சாந்தின் 7 ஆண்டு கால தடையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவடையுள்ளது. இதனால் கேரள மாநில கிரிக்கெட் சங்கம் அவரை ரஞ்சி கிண்ணத்துக்கான கேரள அணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஆனால் உடற்தகுதி பெற்றால் மாத்திரமே அணியில் இடம் பெறுவார்.
இதுகுறித்து ஸ்ரீ சாந்த் கூறுகையில், ‘‘எனக்கு வாய்ப்பு கொடுத்த கேரள மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு நான் உண்மையிலேயே நன்றி கடன்பட்டவன். என்னுடைய உடற்தகுதியை நிரூபித்து, அணிக்கு சிறந்த முறையில் திரும்புவேன். இது அனைத்து சர்ச்சைக்கும் விடைகொடுக்க வேண்டிய நேரம்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM