இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் சந்தித்து மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் யோசனைகள் பிரகாரம் சில வேண்டுகோள்கள் மலையக மக்களுக்காக முன் வைக்கப்பட்டது
அதில் பெருந்தோட்டப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
பதுளை, கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து அதன் ஊடாக திறமையான மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகளை உருவாக்கும் நோக்கில் புதிய தேவையான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தாதியர் கல்லூரி அமைத்தல்.
வைத்திய முகாமைத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் திறமையுள்ள இளைஞர்களை வைத்தியத்துறையிலும் சுகாதாரத்துறையிலும் ஊக்குவித்தல்.
அம்புலன்ஸ் வசதிகளை அதிகரிப்பதுடன் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அவசரமான நேரங்களில் சரியான காலத்திற்கு நோயாளியை கொண்டு செல்லல் போன்ற பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் ஆகிய விடயங்கள் பேசப்பட்டதுடன் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM