குப்பைகளை உணவாக உட்கொள்ளும் 42 யானைகள்!

18 Jun, 2020 | 10:32 PM
image

திருகோணமலையில் கன்னியா பிரதேசத்தில் உள்ள குப்பைகள் கொட்டும் தளத்தில் கொட்டப்படும் குப்பைகளை 42 யானைகள்  உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகரசபைக்கு உற்பட்ட பிரதேசங்களில் இருந்து நாளாந்தம் பதினான்கு டிரக்டர் குப்பைகளும்,பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பண்ணிரென்டு தடவைகளும்,திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து ஆறு தடவைகளும், பிரிமா மா ஆலை மற்றும் மிட்சிபிச்சி சிமெண்டு நிறுவனத்தின் குப்பைகளும் நாளாந்தம் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்டுகிறது.

முப்பத்திரெண்டு ஏக்கர் நிலப்பரப்புடைய இந்த குப்பை கொட்டும் தளத்திற்கு நாளாந்தம் கொட்டப்படும் குப்பைகளை பிரித்து எடுக்கும் நடைமுறையானது தற்போது பின்பற்றப்படுவதில்லை.

இந்நிலையில், இவ்வாறு பிரிக்கப்படாத குப்பைகளை உணவாக உண்டு பழக்கப்பட்ட யானைகள் குப்பைகளோடு கலந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர், பொலித்தீன் போன்ற சமிபாடு அடையாத பொருட்களை உணவாக உற்கொள்வதை அன்றாடம் காணக்கூடியதாக இருப்பதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இவ் யானைகள் பலநேரங்களில் மக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கு புகுந்து சேதங்களை விளைவிப்பதாகவும் பயன்தரும் மரங்களை அழித்துச்செல்வதாகவும் அப்பிரதேச வாசிகள் கவலைதெரிவிக்கின்றனர்.

குப்பைகொட்டும் தளத்திற்கு யானைகளின் வரவை கட்டுப்படுத்துவதன் மூலம் யானைகளின் எண்ணிக்கையை திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்க செய்யலாம் தவறும்பட்சத்தில் ஒரு தேசிய இனத்தின் அழிவுக்கு திருகோணமலையில் வழிசமைத்துக்கொடுப்பவர்கள் நாமாக இருக்க்கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09