எண்ணற்ற அபூர்வ நிகழ்வுகளை உள்ளடக்கியது இயற்கை. அந்த அதிசய நிகழ்வுகளில் ஒன்று தான் அரோரா எனப்படும் துருவ ஒளி. அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை கிரகத்தின் காந்தப் புலத்தால் ஈர்க்கப்பட்டு அந்த கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது இந்த துருவ ஒளி வெளிப்படுகிறது. பூமியிலும் இந்த நிகழ்வு தோன்றுகிறது.
இந்நிலையில், பூமியைப்போன்று வியாழன் கிரகத்தின் மீது தோன்றிய துருவ ஒளியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா படம் எடுத்து வெளியிட்டுள்ளது.குறித்த படம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன், பூமியைவிட பலமடங்கு அதிக கொள்ளளவு கொண்டது. பூமியில் காணப்படும் மின்னல்களை விட இங்கு ஆயிரம் மடங்கு வலுவான மின்னல்கள் உருவாகும். அதேபோல், பூமிக்கு மேலே தோன்றக்கூடிய துருவ ஒளியைவிட ஆயிரம் மடங்கிற்கும் அதிகமான அடர்த்தியுடன் பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் வியாழனில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது வாயுக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் தான் வியாழன் கோளின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.
தீவிர காந்தப்புலத்தால் உருவான துருவ ஒளிக்கோவை அடங்கிய வீடியோவையும் நாசா வெளியிட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM