இந்திய ஆட்சி முறைதான் எமக்குத் தேவை - வீ.ஆனந்தசங்கரி

15 Jun, 2020 | 08:37 PM
image

(எம்.நியூட்டன்)

இந்திய முறையிலான ஆட்சிதான் இலங்கைக்கும் சரி இதனையே நான் நீண்டகாலமாக கூறிவருகின்றேன். இன்றைய ஜனாதிபதியும் அவ்வாறான ஒரு ஆட்சிமுறை தான் அமையும் என்று கூறியுள்ளார். எனவே இத்தகைய ஆட்சியை அமைப்பதற்கு எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தின் 87 ஆவது பிறந்ததினமும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் இணையத்தள அங்குரார்ப் பணமும் இன்று  கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களை பாதுகாக்கவேண்டியபொறுப்புஉங்கள் அனைவருக்கும் உள்ளது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளி விட்டது 2004 ஆம் ஆண்டு 22 பேர் பாராளுமன்றத்தில் இருந்தபோதே மக்களுக்கான பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாம் சர்வதேச ரீதியிலான சிறந்த சந்தர்ப்பம்அமைந்திருந்தது அதனை முறையாகப் பயன்படுத்தி இருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் மக்களை பாதுகாத்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாதவர்கள் இன்றும் தாங்கள் தான் தீர்வைக் காணுவோம் என்று கூச்சல்போடுகின்றார்க்ள இதுவரை காலத்திலும் சமஷ்டி ஒற்றை ஆட்சி எனக் கதை விட்டவர்கள் என்னத்தைச் செய்தார்கள். சமஷ்டி ஆட்சியோ ஒற்றை ஆட்சியோ இந்தநாட்டுக்கச் சரிவராது நான் நீண்டகாலமாகவே இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குள்ள ஆட்சி முறைதான் இலங்கைக்கும் சரி வரும் என கூறிவந்துள்ளேன்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச ஆட்சியில் இருந்தபோது இதைப் பற்றிக் கலந்துரையாடியுள்ளேன். இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் இந்திய முறையிலான ஆட்சி முறையிலான தீர்வுதான் அமையும் என்றகருத்தைக்கூறியுள்ளார்.

ஆகவே தமிழ் மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் என்றே நான் இவ் வேளையில் கோரிக்கை வைக்கின்றேன். வடக்கு மாகாகணத்தில் முன்னாள் முதலமைச்சர் நீதி அரசர் விக்கினேஸ்வரன் ஜனநாயகத்தை குழிதோண்டியவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு பணத்தைக் கேட்கின்றார். இவருக்கு வேறு வேலை இல்லையா மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்

நீதியரசர் விக்கினேஸ்வரனை எம்முடன் இணையுமாறு கேட்டுள்ளேன் எமது தலைமைப்பொறுப்பை தருவதாகக் கூறியுள்ளேன். இன்றும் அவருக்கு இதற்கான அழைப்பைவிடுக்கின்றேன். தமிழ்த் தலைவர்களினால் உருவாக்கப்பட்ட எமது கட்சியின் பெறுப்பை ஏற்று அவர்கள் பாதையில் செல்வதற்கே இதற்கானஅழைப்பை விடுக்கின்றேன். எமது மக்களைப் பாதுகாக்கின்றபொறுப்பு எல்லோருக்குமே இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40