மாணவி மீது துஷ்பிரயோகம் ;  5 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Priyatharshan

01 Jul, 2016 | 03:02 PM
image

( மயூரன் )

வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றசாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள  9 சந்தேக நபர்களில் 5 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றசாட்டில் ஆசிரியர் ஒருவரும் அந்த குற்றத்தை மறைக்க உதவியவர்கள் எனும் குற்றத்தில் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்பட எட்டு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர். 

அதில் நேற்று முன்தினம் அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகளும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

அதில் 6 ஆம் , 7 ஆம் , 8 ஆம் , 9 ஆம் , சந்தேகநபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவர்களையும் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தார். 

 பிணை விண்ணப்பத்தை  நிகாரித்த நீதிவான் 1 ஆம் , 6 ஆம் , 7 ஆம் , 8 ஆம் , 9 ஆம் , ஆகிய சந்தேக நபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதேவேளை சந்தேக நபர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஊடகங்களில் சந்தேக நபர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டு செய்திகள் பிரசுரமாகின்றன. இதனால் சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் பாதிக்கப்படுகின்றார்கள் என நீதிவானிடம் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த நீதிவான் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரையில் அவர்கள் சந்தேக நபர்கள் தான் எனவே அவ்வாறு செய்தி வெளியிடும் ஊடகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21