பாகிஸ்தானின், ராவல்பிண்டி நகரில் சனநெரிசலான சந்தையில் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளார்கள்.
பாகிஸ்தான் இராணுவத்தின் பொது தலைமையகத்திற்க அருகில் உள்ள சதார் என்ற பகுதியில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த குண்டுவெடிப்பில் ஒரு நபர் கொல்லப்பட்டதுடன் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியை சுற்றி வளைத்துள்ள அதிகாரிகள், மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு "ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாதத்தின் முயற்சி, ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவோர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது" என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை நாடு எதிர்த்துப் போராடும் இவ் வேளையில், ஏற்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்புக்கு எவரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM