ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியிலுள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ஷெர் ஷா சூரி மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வெடித்தன" மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் அஜிசுல்லா மொப்லே உயிரிழந்தவர்களில் ஒருவர் என்று ஆப்கானிஸ்தான உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நகரத்தின் முக்கிய பிரார்த்தனைத் தலைவர்களில் ஒருவராவார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மசூதியை சுற்றி வளைத்து, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
குறித்த தாக்குதலை யாரும் உடனடியாக பொறுப்பை ஏற்கவில்லை, ஆனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு மசூதி தாக்குதல் இஸ்லாமிய அரசு தொடர்புடைய குழு உரிமை கோரியது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM