(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சி பொதுதேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகளவில் புது முகங்களையே களமிறக்கியுள்ளது. மக்கள் எதிர்பார்த்தது போன்று புதிய உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான சந்தரப்பத்தை ஐ.தே.க. வழங்கியுள்ளது என்றும் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, ஐ.தே.க. களமிறக்கியுள்ள 291 வேட்பாளர்களிலிருந்து 225 பேரை தெரிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை முறையாக செயற்படுத்தக் கூடிய சிறந்த தலைமைத்துவத்தை ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே வழங்கமுடியும் என்றும் அவரே ஐ.தே.க.வின் பிரதம வேட்பாளர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தனர். அதற்கமைய இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவில் புதுமுகங்களையே தேர்தலில் களமிறக்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 291 வேட்பாளர்கள் இவ்வாறு போட்டியிடவுள்ளனர். மக்கள் எதிர்பார்த்தை போன்று இம்முறை புதிய முகங்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஐ.தே.க. வழங்கியுள்ளது. இந்நிலையில் இவர்களிலிருந்தே 225 உறுப்பினர்களையும் மக்கள் தெரிவு செய்ய முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM