(செ.தேன்மொழி)
கொள்ளுப்பிட்டியில் முன்னிலை சோசலிஷ கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக கடமையில் ஈடுப்பட்டிருந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் அத்திட்டிய தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் , தொற்று நீக்கம் மற்றும் நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுதல் ஆகிய சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க மினியாபொலிஸ் நகரில் வெள்ளையின அமெரிக்க பொலிஸார் ஒருவரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோய்ட்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னிலை சோசலிஷ கட்சியினரால் கடந்த செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோட்டை நீதிவான் நீதி மன்றத்திற்கு அறிவித்து தடை உத்தரவை பெற்றுக் கொண்டிருந்ததுடன். அதனை கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 53 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பொலிஸாரின் இந்த செயற்பாடு இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், தாக்கல் சட்டவிதிகளுக்கமையவே செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் ஈடுப்பட்டிருந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் தனிமைப்படுத்தி வைப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இவர்கள் அனைவரும் பொலிஸாரின் அத்திட்டிய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM