வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.
இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து இன்றையதினம் (08) காலை சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையிலும் இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக அவரது மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயது இளைஞரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM