பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன் , ஏழு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள், முடிவடையும் நிலையில் உள்ளதாக, அரச அச்சக ஆணையாளர், கங்கானி கல்பணா லியனகே தெரிவித்தார்.
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக, கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருப்பதகாக , சமூக வலைத்தளங்களில், செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை.
வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அதன் பிரகாரம் பொதுத் தேர்தலுக்கான, 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள், தற்போது அச்சிடப்படுகின்றன.
அதில் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிட்டு முடிவடைந்திருக்கின்றன.
தேர்தலுக்கு தேவையான இதர பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் முடிவடைந்திருக்கின்றன.
தேர்தல் இடம்பெறும் திகதியை குறிப்பிட்டு, அச்சிடவேண்டிய பத்திரம் மாத்திரமே, தற்போது அச்சிடவேண்டி இருக்கின்றது.
அச்சிட்டு முடிக்கப்படும் மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்களை உரிய முறையில், தயார் படுத்திய பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM