தபால் நிலையங்களை சனிக்கிழமைகளில் மூடுவதற்கான காரணம் இது தான் !

Published By: J.G.Stephan

07 Jun, 2020 | 05:36 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடும் தீர்மானத்தை தொடர்ந்து செயற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.

சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடிவிடுவதால் திணைக்களத்தின் செலவு பாரியளவில் குறைவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.



பொதுவாக ஒரு சனிக்கிழமை தினத்தில் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்படுவதால் சுமார் 20 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றதுடன், அவ்வாறான தினமொன்றில் தபால் நிலையங்களை திறப்பதால் சுமார் 3மில்லியன் ரூபா வரையான வருமானமே கிடைக்கப்பெறுவதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் செலவிடப்படும் 20 மில்லியன் ரூபாவில் 18 மில்லியன் ரூபா சனிக்கிழமை நாட்களில் பணி புரியும் ஊழியர்களுக்கான மேலதிக நாளுக்கான கொடுப்பனவாக செலவிடப்படுவதுடன் மீதி 2மில்லியன் ரூபாவும் ஒரு நாளுக்கான மேலதிக நேர கொடுப்பனவாக செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருந்தபோதும் சனிக்கிழமைகளில்  தபால் நிலையங்களை  மூடிவிடும் தீர்மானத்துக்கு ஒன்றிணைந்த தபால் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. இதுதொடர்பாக குறித்த சங்கம் தபால் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றனது. குறித்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கொரோனா பரவிக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தபால் ஊழியர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பை கண்டுகொள்ளாமல், தபால் ஊழியர்கள் கஷ்டத்துக்கு மத்தியில் பணிபுரிந்து பெற்றுக்கொள்ளும் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் சனிக்கிழமை நாள் கொடுப்பனவு என்பனவற்றை இல்லாமலாக்கவே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது.

தபால் திணைக்களத்தின் இந்த தீர்மானத்துக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அதனால் இந்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தபால் ஊழியர்களும் நாளை திங்கட்கிழமை முதல் தங்களது சாதாரண சேவை நேரத்தை மாத்திரம் மேற்கொள்வதாகவும் மேலதிக நேர சேவைக்காக தங்களுக்கு அழுத்தம் மேற்கொள்ளக்கூடாது எனவும் குறித்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடி இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக தபால்மா அதிபர் ராஹேண ஆரியரத்ன தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09