ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்ட தூதுவர்களை சந்திக்க தயாராகிறது தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணி

Published By: J.G.Stephan

06 Jun, 2020 | 09:51 AM
image

(ஆர்.ராம்)

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணி ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி, உட்பட முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை விரைவில் சந்திப்பதென தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், யாழில் உள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.



இதன்போது, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் முதலில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பக கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் 11பேரை உறுப்பினர்களாகக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணி,  மற்றும் 13 உறுப்பினர்களைக் உள்ளடக்கி பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயணி ஆகியவற்றின் உள்நோக்கங்கள் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அண்மைக் காலமாக முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதோடு, நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகருகின்றதா என்ற சந்தேகமும் எழுப்பபட்டது. இதுதொடர்பில் விசேட கரிசனை கொள்வதோடு அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டது.

மேலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான தயார்ப்படுத்தல் தொடர்பிலும் பேசப்பட்டதோடு அதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலைமைகள், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் காணப்படுகின்ற மிகமோசமான பின்னடைவு நிலைமைகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி உட்பட முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை சந்திப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதென தீர்மனிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58