தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்கு முன் அரசியல் கட்சிகளுடன் ஆணைக்குழு பேச வேண்டும் - அஸாத் சாலி

05 Jun, 2020 | 07:48 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும்  பெற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேர்தலை சுகாதார முறையில் நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தலை சுகாதார முறையில் நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் வழிகாட்டியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தேர்தலில் வாக்காளர்களே வாக்களிக்க வேண்டும். அவர்களின் மன நிலைகளை அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளுமே நன்கறிவர். அதனால் கட்சிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட வேண்டும். 

மேலும் கொரோனா வைரஸை விட மிகவும் மோசமாக தேர்தல் வைரஸ் உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சி ஜூன் 20ஆம் திகதி, எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டுமென பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது. எனினும், ஆளுங்கட்சிக்காரர்களை விட ஏனைய அனைத்துக் கட்சியினரும், இது தேர்தல் காலம் அல்ல எனவும் மக்களை கொரோனா வைரஸுக்கு காவுகொடுத்து, பலிக்கடாவாக்க முடியாதெனவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில், தேர்தலை நடத்துமாறு அடம்பிடித்து நின்றது. அதற்காக ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், தேர்தல் திணைக்களத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள், குறிப்பாக, ரத்னஜீவன் ஹூல் ஆகியோரை கடுமமையாக விமர்சித்து வந்தனர். 19ஆவது திருத்தத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைகுழுவின் சுயாதீனத்தன்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில், தினமும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் தேர்தல் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மனுக்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்ற விசாரணையின் ஆரம்ப நாளன்றே, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என அறிவித்தது. இது அரசாங்கத்துக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த அரசாங்கம், தற்போதைய நிலையில் சாதாரண பெரும்பான்மையைக் கூட பெற முடியுமா? என்ற ஏக்கத்திலேயே இருக்கின்றது.

அதேபாேன்று தேர்தலை நடத்துவது தொடர்பில், சுகாதார அதிகாரிகளும் நீதிமன்றத்துக்கு ஒன்றும் ஊடகங்களில் வேறொன்றுமாகவே கருத்துத் தெரிவித்து வந்தனர். தற்போது தேர்தலை நடத்த சுகாதார அதிகாரிகளால் வழிகாட்டல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. குறித்த வழிகாட்டல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயிக்கவேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10