(இராஜதுரை ஹஷான்)
பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் அனைத்து இன மக்களின் ஆதரவு அவசியம். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை கொண்டு பொதுத்தேர்தலின் வெற்றியை மதிப்பிட முடியாது.
தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எவ்வித் தடையும் தற்போது கிடையாது. தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.
பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவை பெற்று பலமான அரசாங்கத்தை பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பிறகு சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM