நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவே ஜனாதிபதி செயலணி : மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்

Published By: J.G.Stephan

04 Jun, 2020 | 05:31 PM
image

(ஆர்.யசி)

போதைப்பொருள் கடத்தலை தடுக்க முன்னைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தும் அது வெற்றியளிக்கவில்லை. நாட்டின் சகல மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது அரசாங்கம். எவரும் இனி கப்பம் பெறவோ, குற்றங்களில் ஈடுபடவோ முடியாது எனவும் கூறுகின்றது.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 நெருக்கடியில் இருந்து நாட்டினையும்  மக்களையும் ஜனாதிபதி மீட்டதை போலவே இந்த நாட்டில் பாதாள கோஷ்டிகளின் அட்டூழியங்கள், போதைப்பொருள் கடத்தல் காரர்களின் மூலமாக நாடு நாசமாவதை தடுக்கும் விதத்தில் ஜனாதிபதி செயலணியை உருவாக்கியுள்ளார்.

இந்த நாட்டில் கப்பம் பெற்று மக்களை அச்சுறுத்தி, அப்பாவி மக்களின் செயற்பாடுகளில் தலையிடும் நபர்களின் தொல்லைகளில் இருந்து சகல மக்களையும் பாதுகாக்கவே இந்த செயலணி இயங்கும்.

அதேபோல் சிறைச்சாலைகளில் நடக்கும் மோசமான செயற்பாடுகள் அனைத்தையும் தடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தும் அதனை தடுக்க முடியாது போய்விட்டது.

எனவே தான் இந்த செயலணி முழுமையாக பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டினை தூய்மையான, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சகல மக்களும் வாழக்கூடிய நாடாக மாற்றியமைக்கவே ஜனாதிபதி இந்த செயலணியை உருவாக்கியுள்ளார்.

இதில் குற்றங்கள் நடந்தால் பொலிஸ் அதனை கையாள்வார்கள். அப்பாவி பொதுமகன் ஒருவர் குற்றவாளிகளின் மூலமாக பாதிக்கப்பட்டால் அதனை பொலிஸ் கருத்தில் கொள்ளவில்லை என்றால் அடுத்ததாக பொலிசாருக்கு மேல் அதிகாரத்திற்கு கொண்டுசெல்ல முடியும்.

அதற்கு இந்த செயலணி துணையாக இருக்கும். சகல மக்களும் எந்தவித அச்சமும் இல்லாது செயற்பட உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணிக்கு சகல பொதுமக்களினதும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50