பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை : சந்தேகநபர் கைது!

04 Jun, 2020 | 05:10 PM
image

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததுடன் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்  ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலுக்கமைய பொலிஸார் மாறுவேடம் அணிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதன் போது மாறுவேடத்தில் சென்ற பொலிஸ்ர் கைத்தொலைபேசி ஊடாக சந்தேக நபரை தொடர்பு கொண்டு கஞ்சாவினை வாங்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ் தொலைபேசி உறையாடலின் பின் சந்தேக நபர் கஞ்சா மற்றும் வாள் என்பவற்றை  தம்முடன் எடுத்து  கொண்டு  மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார்  சந்தேக நபரை  மடக்கி பிடித்ததுடன்  பாடசாலை புத்தகத்தில் சுற்றிய நிலையில்  75  கஞ்சா பொதிகளையும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 2 அடி நீள வாள், கைத்தொலைபேசி மற்றும் வாகன இலக்கத்தகடு அற்ற பதிவு செய்யப்படாத  டியோ ரக கறுப்பு நிற  மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர். இவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 300 கிராம் நிறையுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறு கைதான சந்தேக நபர் மருதமுனை அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் எனவும் வெள்ளிக்கிழமை(5) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49
news-image

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு...

2023-12-10 17:05:48