அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

04 Jun, 2020 | 02:47 PM
image

(செ.தேன்மொழி)

கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதன் நோக்கில் நேற்று புதன்கிழமை இரவு முதல் நாளை மறுதினம் அதிகாலை நான்கு மணிவரை நாடளாவியரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால், 24 மணித்தியாலயமும் இயங்கும் பொலிஸ் சோதனைச்சவாடிகளை கடமையில் ஈடுப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொசன் பொயாதினம் காரணமாக மக்கள் நடமாடும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பும் அதிகமாக காணப்படும். இதனாலேயே நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செல்பவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதன் நோக்கிலே இந்தச் சோதனை சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டை விட்டு வெளியேறும் நபர்கள், வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததன் பின்னரே அவர்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய நேற்று புதன்கிழமை இரவு பத்து மணிமுதல் நாளை மநுதினம் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிவரை இந்த சோதனைச்சாவடிகள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அத்தியாவசிய தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44