கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் முகக் கவசங்களை முகத்தில் அணிய வேண்டுமே தவிர, கழுத்தில் அணியக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
மக்கள் நெருக்கமாக இருப்பதால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கிறது. மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்துவதால் நோய் தொற்றாளர்களை அதிக அளவில் கண்டறிய முடிகிறது. நோய் தொற்று அதிகமானாலும் உயிரிழப்பை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சமுதாய பங்களிப்பு அவசியம்.
வெளியில் செல்லும் பொழுது முக கவசங்களை கட்டாயம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இன்றைய திகதியில் பலர் முக கவசங்களை அணிந்து செல்கிறார்கள். ஆனால் மற்றவர்களுடன் பேசும்பொழுது முக கவசத்தை முகத்திலிருந்து நீக்கிவிட்டு, கழுத்தில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.
இது தவறு. மற்றவர்களுடன் பேசும் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை கண்டிப்பாக மூடியிருக்கும் வகையில் கவசத்தை அணிய வேண்டும். அத்துடன் இருமும் போதும், தும்மும் போதும் கைகளை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு முக கவசம் அணிவது புதுவித அனுபவமாக இருப்பதால், அதனை மருத்துவ ஊழியர்கள் பரிசோதிக்கும் தருணத்தில் மட்டும் முகத்தில் அணிகிறார்கள். ஏனைய தருணத்தில் அதனை கழுத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. இவ்வாறு அணிவதால் எவ்வித பயனும் இல்லை.
அதே தருணத்தில் கொரோனா தொற்றினை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் இதுவரை முழுமையான அளவில் கண்டறிய படாததால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதே தருணத்தில் தற்பொழுது இந்தியாவில் நானோ தொழில் நுட்பத்துடன் கூடிய முக கவசத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய முக கவசம் மக்களை விட. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
டொக்டர் சுப்பிரமணியம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM