அர்ஜுன மகேந்திரன் வெகுவிரைவில்  நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் - சுசில் பிரேமஜயந்த

Published By: Digital Desk 3

02 Jun, 2020 | 05:14 PM
image

( இராஜதுரை ஹஷான்)

சிங்கப்பூர் நாட்டு பிரஜையான  அர்ஜுன மகேந்திரனை  மத்திய வங்கியின் ஆளுநராக  நியமித்ததை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள்   செய்த  பாரிய தவறாகும். ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழு ஊடாக    பிணைமுறி கொடுக்கல் வாங்கள் மோசடி தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றன.

வெகுவிரைவில்  அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ   அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட  அதிகாரத்தை  கொண்டு கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி   நள்ளிரவு பாராளுமன்றத்தை  கலைத்து பொதுத்தேர்தலுக்கு  திகதி குறித்தொதுக்கி  வர்த்தமானி வெளியிட்டார்.

கொவிட் - 19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக  ஏப்ரல் 25 ஆம் திகதி இடம் பெறவிருந்த பொதுத்தேர்தல்   திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை, பொதுத்தேர்தலை  ஜூன்  மாதம் 20 திகதி நடத்துவதை சவாலுக்குட்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய  கட்சிகள்    நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தன. பொதுத்தேர்தலை  எதிர்க் கொள்ளும் அச்சத்தில் இவர்கள்  ஆரம்பத்தில் இருந்து  பொதுத்தேர்தலுக்கு  எதிராக  செயற்பட்டார்கள்.  

கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற முறைக்கேடுகள், அரச  சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில்  உரிய   விசாரணைகள்  எடுக்கப்படுகின்றன.   

மத்திய  வங்கி  பினை முறி  விநியோக மோசடியை    பிரதானமாக குறிப்பிட வேண்டும்.   சிங்கப்பூர் நாட்டு பிரஜையான   அர்ஜுன  மகேந்திரனை   மததிய  வங்கியின் ஆளுநராக   நியமித்தமை   நல்லாட்சி அரசாங்கத்தின்  தலைவர்கள் இழைத்த  பாரிய  குற்றமாகும்.

பிணைமுறி    விநியோக மோசடி தொடர்பான  விசாரணைகள் துரிதமாக   ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றன.    மோசடியின் முக்கிய சூத்திரதாரியான  மத்திய  வங்கியின்  முன்னாள்  ஆளுநர் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்துவ ரப்படுவார். இதற்கான  உரிய நடவடிக்கை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31