(செ.தேன்மொழி)
மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபான மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 714 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல்மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய நேற்று சனிக்கிழமை காலை 6 மணிமுதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது கொழும்பு ,கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் 320 பேரும், ஹெரோயின் போதைப் பொருளுடன் 218 பேரும் , கஞ்சாப் போதைப் பொருளுடன் 98 பேரும் , ஐஸ் உள்ளிட்ட போதைப்போதைப் பொருட்களுடன் 78 பேரும் கைது செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல்காரணமாக தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான சட்டவிரோத கடத்தல்கள் அதிகரித்துள்ளதனால்,இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம் , போதைப் பொருள் கடத்தல் காரர்களை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.
அதற்கமையவே இந்த சுற்றிவளைப்பும் இடம் பெற்றுள்ளதுடன் , சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதுடன் , இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM