சோமாலியா தலைநகரம் மொகாடிசு அருகில் வீதியோரம் குண்டொன்று வெடித்தலில் சிறிய பஸ் ஒன்று அதில் சிக்கியுள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணித்த 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நகரத்திலிருந்து பஸ்ஸில் மரண வீட்டுக்குச் சென்றவேளை மொகடிசுவில் இருந்து வடமேற்கே 19 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹவா அப்தி கிராமத்தில் குண்டு வெடிப்பிற்கு உள்ளானது.
"குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீதி பெரும்பாலும் அரச மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் வீதியாகும்.
எந்தவொரு குழுவும் உடனடியாக குறித்த சம்பவத்திற்கு உரிமை கோரவில்லை.
1991 ஆம் ஆண்டு முதல் சோமாலியாவில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
2008 ஆம் ஆண்டு முதல், இஸ்லாமிய போராளிகள் குழு அல் ஷபாப் சோமாலியாவின் மத்திய அரசாங்கத்தையும் அதன் சொந்த ஆட்சிக்கு எதிராக போராடி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM