பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்

Published By: Digital Desk 4

31 May, 2020 | 11:17 AM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் நடந்த குறித்த கடத்தலை வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இன்று அதிகாலை வேளை கொடிகாமத்தில் உள்ள வீடொன்றிற்குள் 7 பேர் கொண்ட குழுவினர் புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் புகுந்த அவர்கள் தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், தமது கைகளில் இருந்த கத்தி, வாள் போன்றவற்றால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். 

இருப்பினும் குறித்த யுவதி கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அருகில் உள்ள கோவிலில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40