தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி

Published By: Digital Desk 4

29 May, 2020 | 08:50 PM
image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன் வைத்து கடந்த 17ஆம் திகதி பொலிசார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதன் போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல்  அன்றைய தினம்  கட்டளையிட்டிருந்தார்.   

மறுநாள் குறித்த கட்டளைக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் அணைத்து, குறித்த கட்டளையை மீள பெற வேண்டும் என மன்றிடம் கோரினார்கள். அன்றைய தினம் இரு தரப்பின் வாதங்களை அடுத்து, தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. 

அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது" என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார். 

அதேவேளை வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்றில் முன்னிலையானர்கள். 

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , குறித்த வழக்கினை தொடர்ந்து முன்னேடுத்து செல்ல ஏதுவான காரணிகள் இல்லாதமையால் வழக்கினை தள்ளுபடி செய்து,  வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பேரினையும் வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39