நுவரெலியா மாவட்டத்திற்கு ஊரடங்கு!

29 May, 2020 | 08:11 PM
image

(எம்.மனோசித்ரா)

நுவரெலியா பொலிஸ் நிர்வாக மாவட்டத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (29) நள்ளிரவு 12.00 முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று  வெள்ளிக்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக நுவரெலியா மாவட்டத்துக்குள் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை தொடர்பில் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு ஏற்ப ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகம் விடுத்து அறிவிப்பில், 

நாளை, மே 30 சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

நேற்று 28, வியாழன் அறிவிக்கப்பட்டவாறு மே 31, ஞாயிறு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

ஜூன் முதலாம் திகதி திங்கள் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் விதம் குறித்து நேற்றைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விபரங்களில் மாற்றங்கள் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25