(ஆர்.யசி)
அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 பசுக்களை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த நாட்டின் நுகர்வுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவை குறைக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பத்திரன இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
எனினும் அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 பசுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
கமத்தொழில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவை பத்திரம் மூலமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த நாட்டிற்கு பொதுமக்கள் நுகர்வுக்காக 50 பில்லியன் ரூபாய்கள் பால்மா இறக்குமதியால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் அதனை இலங்கையில் உற்பத்தி செய்து தேசிய பால் உற்பத்தியை பலப்படுதவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM