சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) புதிய வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்கும் போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பந்தின் மீது எச்சில் தேய்க்கக்கூடாது.
கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டித் தொடருக்கு முன்னர், வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது என்பது நம்பத்தகுந்த விடயமாக இல்லை என ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இணையதளமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
“தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தங்களது போட்டி தொடரை ஆரம்பிக்கவுள்ளதாக பேசுவது சற்று நம்பத்தகுந்த விடயமாக இல்லை. அவர்களுக்கு வேறு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் இந்த போட்டி தொடரை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு மத்தியில் இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியம். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.
போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எல்லாம் முடித்து தனிமைப்படுத்திய பிறகும் டெஸ்ட் போட்டியின் 2 ஆவது நாளில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்து என்ன நடக்கும். தற்போதைய விதிமுறையின் படி பார்த்தால் பொது சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்துவார்கள். அத்துடன் அந்த டெஸ்ட் போட்டி பாதியில் இரத்தாகும்.
இதனால் அந்த தொடரை நடத்துவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகும். போட்டியின் போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் இரத்து செய்யாமல் இருப்பதற்கான வழிமுறையை சுகாதாரத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசத்தரப்பினருடன் இணைந்து நாம் கண்டறிய வேண்டும்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM