பாராளுமன்ற வளாகத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாளை அஞ்சலி

27 May, 2020 | 07:05 PM
image

(ஆர்.யசி)

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சகலரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்  இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்றில் இருந்து எதிர்வும் ஞாயிற்றுக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் அவரது பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

நாளை காலை 10.45 மணி தொக்கம் காலை 11.30 மணி வரையில் அவரது பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்படும்.

இந்த அஞ்சலி நிகழ்விற்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய  தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் என சகலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டுள்ளதுடன்  அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாத  முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 11.30 வரையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்படும்  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அதன் பின்னர் கொழும்பு ஆனந்த குமாரசிறி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான "சௌமிய பவன் " இல் நாளையதினம் முழுவதும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27