தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி

Published By: Digital Desk 3

26 May, 2020 | 08:53 PM
image

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் இன்று (26.05.2020) காலை தேன் எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரான 19 வயது மாணவன் மரக்கிளை உடம்பில் குத்தியதில் உயிரிழந்துள்ளதாக  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சாம்பல்தீவு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும், நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்பவர் எனவும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருப்பவர் எனவும் தெரிவித்தனர்.

தேன் எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரே சுமார் 16 அடி உயரமான மரம் ஒன்றில் பிணமாக கிடந்தவர் எனவும் 15,54 வயதுடைய உயிரிழந்தவருடன் கூட சென்றவர்கள் காட்டில் வழிமாறிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாலை மூன்று மணியளவில் மரணவிசாரணை அதிகாரி திரு.எம் ரூமியினால் மேற்கொள்ளப்பட்டதுடன், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27