பாகிஸ்தானிலுள்ள தனது பெற்றோருக்கு விசா மறுக்கப்பட்டதால் அவர்களைப் பார்த்து அவர்களால் அரவணைக்கப்பட வேண்டும் என்ற தனது இறுதி ஆசை பூர்த்தியடையாத நிலையில் 18 வயது யுவதியொருவர் அமெரிக்க மருத்துவமனையில் மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி யுவதியின் மரணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிரத் சப்ரா என்ற மேற்படி யுவதி அவரது தாயார் நயிலா அமெரிக்காவுக்கு விஜயம் செய்த போது பிறந்திருந்தார். பின்னர் தாயுடன் தாய்நாடு திரும்பிய அவர் தனது 4 ஆவது வயதில் உயிராபத்தான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டு டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நாடு திரும்பிய நயிலாவுக்கும் அவரது கணவருக்கும் தமது மகளை மீண்டும் பார்க்க அமெரிக்கா வருவதற்கு விசா மறுக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த 10 வருட காலமாக கிரத் சப்ரா தனது பெற்றோரையும் சகோதரர்களையும் பார்க்காமலேயே இருந்துள்ளார்.
18 வயதையடைந்திருந்த அவர் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நிலையில் தனது பெற்றோரை மீண்டும் பார்ப்பதே தனது இறுதி ஆசை எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மேற்படி யுவதியின் இறுதி ஆசையை நிறைவேற்றக் கோரி ஊடகங்கள் பலவும் அமெரிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.
இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் கல்பேர்ஸன் எடுத்துக் கொண்ட நடவடிக்கையால் கடந்த மாதம் கிரத் சப்ராவின் பெற்றோருக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த சனிக்கிழமை பிற்பகல் கிரத் சப்ராவின் பெற்றோர் வருவதற்கு சிறிது முன் அவர் உயிரிழந்துள்ளார். அவரது பெற்றோர் வரும் வரை அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியிருந்தது.
அவரைப் பார்க்க வந்த அவரது பெற்றோர் அவரது உயிரற்ற சடல த்தையே காண நேர்ந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM