சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) உறுப்பினராகவுள்ள செளரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ.) தலைவராக நீடிக்க முடியாது என இந்தியாவின் மத்திய பிரதேச மாநில உறுப்பினரொருவர் போர்க்கொடித் தூக்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து பி.சி.சி.ஐ.யின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
ஐ.சி.சி.யின் கூட்டம் கடந்த மார்ச் 28 ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கங்குலி ஐ.சி.சி. யின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். பி.சி.சி.ஐ. சார்பில் அவர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐ.சி.சி. தலைவராகவுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஷஷாங் மனோகரின் பவி
க்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அந்தப் பதவிக்கான போட்டியில் கங்குலி உள்ளார். இதற்காகவே அவர் ஐ.சி.சி. தயில் நியமனமானார்.
ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் என்று தென் ஆபிரிக்க முன்னாள் தலைவரும் அந்நாட்டு கிரிக்கெட் சபை இயக்குநருமான கிரேம் ஸ்மித் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் ஐ.சி.சி. யின் உறுப்பினராக கங்குலி நியமிக்கப்பட்டிருப்பதால், பி.சி.சி.ஐ.யின் தலைவராக அவரால் நீடிக்க முடியாது என்று இந்தியாவின் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினரான சஞ்சீவ் குப்தா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கங்குலி மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஏனைய நிர்வாகிகளுக்கும் மின்னஞ்சல் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சஞ்சீவ் குப்தா கூறியதாவது:-
“பி.சி.சி.ஐ.யின் விதிமுறையின்படி ஐ.சி.சி. உறுப்பினராக நியமிக்கப்பட்டால், அவர் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியை வகிக்க முடியாது.
ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்கப்பட்டவுடன் கங்குலியின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவி தானாகவே செல்லுபடியற்றதாகிவிடும். பி.சி.சி.ஐ.யின் விதி 14(9) இதைத் தெளிவாக குறித்துக் காட்டுகிறது. இதனால் பி.சி.சி.ஐ.யின் தலைவராக கங்குலி தொடர முடியாது” என்று சஞ்சீவ் குப்தா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM