போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் வீரர் செஹான் மதுசங்க, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
குளியாப்பிட்டி - பன்னலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான ஷெஹான் மதுஷங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
பன்னல பொலிஸாருக்கு கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பன்னல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டு வீரரான 25 வயதுடைய ஷெஹான் மதுஷங்க அவரது காரில் சென்றுகொண்டிருந்த போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு சோதனை மேற்கொண்ட நிலையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த போதைப் பொருள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை செஹான் மதுசங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM