வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக செல்வோர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்  

Published By: J.G.Stephan

25 May, 2020 | 07:56 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தினமும் தொழிலுக்கு வந்து செல்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் முறையானதொரு செயற்திட்டத்தை முகாமைத்துவம் செய்யவில்லை என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.


மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிமாவட்டங்களிலிருந்து தினமும் கொழும்பிற்கு வந்து செல்லும் தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகள் பற்றி வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்து கொழும்பில் தங்கியிருந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தமது சொந்த இடங்களுக்கே திரும்பியிருந்தனர்.

அவ்வாறானவர்கள் மீண்டும் தமது தொழில் இடங்கள் நோக்கி செல்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெளியிடங்களிலிருந்து தினமும் கொழும்பிற்கு வருகை தருபவர்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முறையான முகாமைத்துவ செயற்திட்டம் எதுவும் செய்யப்படவில்லை. இது தொடர்பில் நாம் போக்குவரத்து திணைக்களத்திற்கு அறிவித்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சே முறையான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47