வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப விழாவான பாக்கு தெண்டல் உற்சவம் இன்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் குறிப்பிட்ட அளவு பக்தர்களோடு இன்று அதிகாலை வேளையிலேயே இந்த உற்சவம் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.
அதிகாலை 1.45 மணியளவில் ஆலயத்தில் மடை பரவி வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஒன்பது குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.
பாக்கு தெண்ட சென்றவர்கள் ஆலயத்தை வந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து இன்றைய உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
பாரம்பரியமாக தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ள ஆரம்ப காலத்தில் ஆலயத்துக்கு போதிய நிதி இல்லாதிருந்தமையால், 9 வீடுகளுக்கு சென்று பொங்கலை அறிவிக்கும் முகமாக இந் நிகழ்வு இடம்பெற்றது.
பொங்கல் வருகைதர இருக்கின்றது என்பதை அறிவித்து அடுத்த 7 ம் நாள் தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் உடசவம் இடம்பெறும். இதன் போது மக்கள் தேவையான பொருட்களை கொண்டு வந்து பொங்கல் செய்வார்கள். இதற்கான அறிவித்தலாகவே இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றதாக ஆலய வரலாறு தெரிவிக்கின்றது.
இச் சம்பிரதாயத்திற்கு இமையவே தற்போதும் பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM