பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது அருகில் உள்ள குடியிருப்பில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக பாகிஸ்தானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை விமானி மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் பயணத்தை ஆரம்பித்த தினத்தன்று மதியம் 1.05 மணிக்கு லாகூரில் புறப்பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கவேண்டும்.
2.30 மணிக்கு கராச்சியில் இருந்து 15 கடல் மைல் (Nautical mile) தொலைவில் விமானம் பறந்தபோது, தரையில் இருந்து 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்துள்ளது.
இதனைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், உயரத்தை குறைக்கும்படி விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், விமானம் பறக்கும் உயரத்தை குறைப்பதற்கு பதிலாக, சரியாக இருப்பதாக கூறி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.
கராச்சி விமான நிலையத்தை அடைய 10 கடல் மைல் தூரம் இருந்தபோது, விமானம் பறக்கும் உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது.
எனவே, இரண்டாவது முறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதும், அப்போதும் தனக்கு திருப்தி அளிப்பதாக கூறிய விமானி, விமானத்தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM