“பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலி ருந்து விலகுவதற்கு ஆதரவாக நீங்கள் போராடினீர்கள். பிரித்தானிய மக்களும் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதன் பின் நீங்கள் எதற்காக இங்கு (ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத் துக்கு) வந்திருக்கிறீர்கள்?" என ஐரோப்பிய ஆணை யகத் தலைவர் ஜீன் கிளோட் ஜங்கர், நிகெல், ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சியின் தலைவர் நிகெல் பராஜ்ஜை நோக்கி வினவினார்.
பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பிரித்தானியாவானது ஐரோப்பிய ஒன்றியத்திலான தனது விலகல் குறித்து (பிறிக்ஸிட்) எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக தெளிவுபடுத்த வேண்டும்.
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து நண்பர்களாகவுள்ளதாகவும் ஆனால் நிச்சயமற்ற நிலைமையைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக கடந்த வாரம் பிரித்தானியா வாக்களித்ததையடுத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் முதல் தடவையாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்துள்ளார்.தனக்குப் பின் பதவியேற்பவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க அனுமதிக் கும் வகையில் தான் பதவி விலகவுள்ளதாக டேவிட் கமெரோன் தெரிவித்துள் ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், லிஸ்பன் உடன்படிக்கையின் 50 ஆவது விதி என்பவற்றிலிருந்து நாடு விலகுவது தொடர்பான உத்தியோகபூர்வ முறைமை அடுத்து பிரதமராக பதவியேற்பவரால் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஐரோப்பிய ஆணையகத் தலைவர் ஜங்கர் கூறுகையில், “நாம் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிலைமையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நான் ஒரு ஐரோப்பிய பிரஜை என்ற வகையில், பிரித்தானிய வாக்கெடுப்பின் பெறுபேறு குறித்து வருத்தமடைகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதன்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் செயற்கிரமத்தை ஆரம்பிக்காத வரை உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாது என பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலிய தலைவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் அவரது இந்த உரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“நாங்கள் நீண்ட கால நிச்சயமற்ற தன்மையை அனுமதிக்க முடியாது. அத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகளுக்கும் இங்கு இடமில்லை" என ஜங்கர் குறிப்பிட்டார்.
"பிரித்தானிய மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.” என ஜங்கர் தெரிவித்த போது அங்கிருந்த ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சியின் தலைவர் நிகெல் பராஜ் கைதட்டி வரவேற்பளித்தார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி தீவிர பிரசாரம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலி ருந்து விலகுவதற்கு ஆதரவாக நீங்கள் போராடினீர்கள். பிரித்தானிய மக்களும் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதன் பின் நீங்கள் எதற்காக இங்கு (ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத் துக்கு) வந்திருக்கிறீர்கள்?" என ஜங்கர் நிகெல் பராஜ்ஜை நோக்கி வினவினார்.
அத்துடன் ஐரோப்பிய தலைமையகத் தில் உரையாற்றிய ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் மான்பிரெட் வெப்பர் நிகெல் பராஜ்ஜுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட் டார்.
“ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியில் மோசமான பொய்யர்களை பார்க்க முடி யும்" என அவர் குற்றஞ்சாட்டினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM