அமெரிக்க ஜனாதிபதி தனக்குச் சொந்தமான கிளப்பிற்குச் சென்று கோல்ஃப் விளையாடியது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியாவின் ஸ்டெர்லிங் பகுதியில் உள்ள தன்னுடைய கிளப்பிற்குச் நேற்றைய தினம் சென்ற ட்ரம்ப், கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.
இது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உயிரிழப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த பொழுதுபோக்கு தேவைதானா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவில் நாளை இராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக பொது விடுமுறையுடன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் பேசிய அதிகாரிகள், இந்த நினைவு தின பொது விடுமுறையில் அமெரிக்கர்கள் வெளியே சென்று நேரம் கழிக்கலாம். கோல்ப் விளையாடலாம்.
டென்னிஸ் விளையாடுங்கள், கடற்கரைக்குச் செல்லுங்கள். ஆனால் வெளியில் செல்லும் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆறு அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 16 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையிலேயே ட்ரம் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலக அளவில் 54 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM