போக்குவரத்துச் சபையை திறைசேரிக்குப் பணம் அனுப்பும் நிறுவனமாக மாற்ற வேண்டும் - ஜனாதிபதி

Published By: Digital Desk 4

24 May, 2020 | 05:09 PM
image

(இரா.செல்வராஜா)

திறைசேரியில் இருந்து மானியம் பெறாமல் திறைச்சேரிக்குப் பணம் அனுப்பும் நிறுவனமாக போக்குவரத்துச்சபையை மாற்றியமைக்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சபை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த வேண்டுகொளை விடுத்தார்.

இந்தக் கலந்துரையடலில் மத்திய போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க பிரதம நிறைவேற்று அதிகாரி சாகரஹேமந்த வடுகே, பணிப்பாளர் நாயகம் அத்துலகுமார உட்பட பணிப்பாளர் சபையினரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரரையாடலின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்ததாவது,

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் போக்குவரத்துச்சபை இயங்க வேண்டும்.

போக்குவரத்துசபையில் சுமார் 4,500 க்கு மேற்பட்டவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, போக்குவரத்துச் சேவையை திறம்பட நடத்த வேண்டும். திறைசேரியில் இருந்து பணம் பெறும் நிறுவனமாக போக்குவரத்துச்சபை இருக்கக் கூடாது. இச்சபையை திறைசேரிக்கு பணம் அனும்பும் நிறுவனமாக மாற்ற வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ்களுக்கு மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். பாடசாலை பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடும் போது பொலிசாரினால் முன்னுரிமை வழங்கக் கூடியதாக இருக்கும். போக்குவரத்து சபையில் ஊழல், திருட்டு,இ மோசடி ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46