கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வந்திருந்த கடற்படையைச் சேர்ந்த 10 பேருக்குஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ் சுகந்தன் தெரிவித்தார்.
அண்மையில்கடற்படையைச் சேர்ந்த 250 நபர்கள் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை முகாமிலும் 149 பேர் இராணுவ முகாம்களிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக கொண்டு வரப்பட்டிருந்தனர்
இவர்களில் 99 பெயருக்கான பரிசோதனைகள் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அவர்களில் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது, இந்நிலையில் அவர்கள் வெலிகந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் 40 பேருக்கான பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களையும் வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM