பேசாலையில் இருக்கும் ரின்மீன் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மன்னாருக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஐஸ் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு வருகை தந்திருந்த பிரதேச மக்களினால் ரின் மீன் தொழிற்சாலை தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சுமார் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த ரின்மீன் தொழிற்சாலையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான குறித்த ரின்மீன் தொழிற்சாலையை மீளச் செயற்படுத்துவதன் ஊடாக சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த அமைச்சர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த தொழிற்சாலையை மீளச் செய்படுத்துவது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM