அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகங்க நிலையங்கள் தங்கள் அலுவலகத்தை மீண்டும் திறக்கும் திட்டங்களை, கண்டுபிடிக்க முயற்சித்துவரும் நிலையில், பேஸ்புக் நிறுவனம் தற்போது தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
அதாவது ,பேஸ்புக் நிறுவனம் அதன் ஊழியர்கள் எப்போதும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் நேற்று வியாழக்கிழமை தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் ஒரு நேரலையில், நிறுவனத்தின் 45,000 ஊழியர்களில் 50 சதவிகிதத்தினர் அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் முற்றிலும் தொலைதூரத்தில் பணியாற்றக்கூடும் என்று தான் ஊகிக்கிறதாக கூறினார்.
இந்த எண்ணிக்கை அவசியமாக ஒரு இலக்கு அல்ல என்று ஸுக்கர்பெர்க் எச்சரித்தாலும், இது வேலையின் எதிர்காலம் குறித்து உலகின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றின் தலைவரின் உறுதியான மதிப்பீடாகும்.
வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் அவரது நிறுவனத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அலுவலக ஊழியர்களுக்கான விதிமுறைகளையும் பாதிக்கிறது.
பேஸ்புக்கின் போட்டியாளரான டுவிட்டர் அதன் முழு ஊழியர்களையும் தொலைதூரத்தில் நிரந்தரமாக வேலை செய்ய அனுமதிக்கும் என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடி மற்றும் படிப்படியான மாற்றங்களை தொடர்ந்து புதிய ஊழியர்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் பணியமர்த்துவது என்பதை நிறுவனம் மேற்கொள்ளும் என்று மார்க் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில், பேஸ்புக் தனது அலுவலகங்களை மீண்டும் திறக்கத் ஆரம்பிக்கையில், (இப்போதே, 95 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றும், குறைந்தது ஜனவரி 1, 2021 வரை அவ்வாறு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்), நிறுவனம் தனது கட்டிடங்களில் 25 சதவீத மட்டுமே செயல்படுத்தும் .
பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, 40 முதல் 60 சதவீதம் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆர்வமாக உள்ளனர். பாதி நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் போது கூட, முன்பு இருந்ததைப் போலவே குறைந்த பட்சம் உற்பத்திகளை செய்வதாக அறிவித்ததுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM