முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட இரு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு அண்மையில் 400 கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர்.
அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கொரோனாத் தொற்று உறுதிப்பட்ட இருவரும் வெலிகந்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெலிசறையில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினருக்கான பரிசோதனைகள் நாளை, மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறும் என்றார்.
இந்நிலையில் இலங்கையில் இன்றையதினம் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் இருந்த கடற்படை வீரர்கள் என்பதுடன் ஏனைய 15 பேரும் டுபாயில்ருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர்கள் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM